இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

அஜிதாவின் "தேவதை"

ஹாய் டியர்ஸ்...

மற்றொரு எழுத்தாளர் நம்மோடு இணைத்திருக்கிறார். அவருக்கு உங்கள் அன்பை ஆதரவையும் கொடுத்து ஊக்கப்படுத்துங்க.

யார் இந்த தேவதை?​

பரபரப்பான மாலைப் பொழுது. அவ்வூரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பெரிய மருத்துவமனையின், ஆப்ரேஷன் தியேட்டர் வாசலில் தங்கள் குடும்பத்தின் புதுவரவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.​

இவர்களின் பதட்டத்தை் பார்த்த குடும்ப நண்பர்களின் கேளிப் பேச்சு வேறு,​

“உனக்கு பேத்திதான் பிறக்கப் போறா?” என்று கூறினாள் பாட்டியின் தோழி.​

“டேய் மச்சான், மருமகன் வரப்போறான்? ட்ரீட் கொடுத்துரனும் என்று மாமனின் நண்பர்கள் வேறு”.​

அதை ரசிக்கும் மன நிலையில் ஒருவரும் இல்லை.​

குழந்தை ஆணா? பெண்ணா? அப்பா மாதிரியா? அம்மா மாதிரியா? கருப்பா? சிவப்பா? என்ற பேச்சுகள் காதில் விழவில்லை.​

குழந்தை நல்லபடியாக பிறந்து வந்தால் போதும் என்ற மனநிலையே.​

“அம்மா, குழந்தையை முதலில் நான் தான் கையில் வாங்குவேன்” என்று மாமன் கூறுவதைக் கேட்டு,​

“இல்லையில்லை நான் தான் வாங்குவேன் என்றாள்” பாட்டி,​

அப்போது, . “பிரீதியோட அம்மா யாரு?​

உள்ளே வாங்க” என்றவாறு வந்தாள், நர்ஸ்..​

அவ்வளவுதான் ஓட்டப்பந்தய வீராங்கனையைப் போல உள்ளே ஓடினாள் அவளின் தாய்.​

தாய் மாமனின் முகத்தில் ஏமாற்றம்!​

ஆப்ரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தவுடன் கண்கள் குழந்தையைத் தேடியது.​

டாக்டரின் கையில் ரோஜாக்குவியலாய் காட்சி கொடுத்தாள்.​

“உங்களுக்குப் பேத்தி பிறந்திருக்கா? என்று கூற” மடை திறந்த வெள்ளமாய் பொங்கிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு குழந்தையைப் பார்த்தாள்.​

டாக்டர், “இந்தாங்க குழந்தையைக் கையில பிடிங்க” என்று கூறி கையில் கொடுத்தார்..​

குழந்தையைக கையில் ஏந்திய தருணம். ஆஹா! என்ன ஒரு அற்புதம்,​

“இவ்வுலகம் என் கையில் என்ற நினைப்பு” .​

“குடும்ப நபர்களையும் கூப்பிடுங்க அவுங்களும் குழந்தையைப் பார்க்கட்டும்”, என்று டாக்டர் கூற, அவர்களையும் அழைத்து வந்தாள் நர்ஸ்​

அனைவரின் முகத்திலும் அளவிடமுடியாத மகிழ்ச்சி. தாத்தாவின் கண்களில் நீர் துளிகள். அவர்கள் தேவதையைக் கண்டனர்​

ஆம். அவள் அக்குடும்பத்தின் முதல் வாரிசு,​

அதிதி.​

 

Forum Stats.

Threads
778
Messages
16,290
Members
2,097
Latest member
Star
Back
Top