


மெளன சிதறல்கள் ரைட்டர் யாருன்னு தெரியாம அவங்கள கண்டுபிடிக்க நாங்க பட்ட பாட்டை இப்போ நினைச்சா சிரிப்பு தான் வருது.
கவிதை எழுதி தேடி, மீம்ஸ் போட்டு, கலாய்ச்சு, சைட் புல்லா யாரு யாருனு டெய்லி தேடி திரிஞ்சி, அதுக்கும் ஒரு படி மேல போய் கடைசி நாள் இவங்ககிட்டயே நீங்க தானேனு நான் கேட்க, நானில்லைனு இந்த சின்ன பிள்ளையை இவங்களும் ஏமாத்த, நானும் நம்பினேன்.

நம்ம பிராத்தனாமா உண்மை விளிம்பி, நீதிடா, நேர்மைடா, நியாயம்டான்னு மறுநாள் பார்த்தா, நானே அது நானே... கதை எழுதியது நானே... இல்லைனு கதை விட்டதும் நானேனு.... ரீல் அந்து போச்சு மாமேன்னு ரைட்டர் நான் தான்னு களத்தில் சொன்னாங்க. அந்த வேதனை இருக்கே அந்த வேதனை... அதுக்கும் ஒரு கவிதை எழுத வச்சாங்க என்னை. அது ஒரு கனா காலம்... இப்போ எனக்கு டைம் கிடைக்க மாட்டேங்குது..
அப்போ தெரியாம பொங்கல் வச்சோம். இப்போ தெரிஞ்சி பொங்கல் வைப்போம். அவனையும் இறக்குங்க. சைட் கலகலப்பா மாறும்.